Maharashtra-வில் தப்புமா ஆட்சி. உச்ச நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட் - அடுத்தடுத்த பரபரப்பு!

Maharashtra Politics - தற்போது சேனா - காங் - என்சிபி சட்டமன்ற உறுப்பினர்கள் மும்பையில் இருக்கும் தனியார் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்


NEW DELHI: 


Maharashtra Politics - மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்த ஆட்சியமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில் ஃபட்னாவிஸ் - அஜித் பவார், மகாராஷ்டிர ஆளுநரிடம் சமர்பித்த ஆதரவுக் கடிதங்களை நாளை காலை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளைக்குள் ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று சிவசேனா - காங் - என்சிபி வைத்த கோரிக்கையை தற்போது நீதிமன்றம் ஏற்கவில்லை. நாளைய விசாரணையில் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும்.