Maharashtra News 2019: எப்போது வேண்டுமானாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்ற நிலையில், தங்களது எம்.எல்.ஏக்களை தக்க வைப்பதில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சொகுசு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அஜித்பவார் வசம் இருந்த 4 எம்எல்ஏக்கள் மீட்பு: தேசியவாத காங்., தகவல்
Maharashtra News 2019: எப்போது வேண்டுமானாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்ற நிலையில், தங்களது எம்.எல்.ஏக்களை தக்க வைப்பதில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சொகுசு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மக்களிடையே குழப்பத்தையும், தவறான உணர்வையும் உருவாக்கும் வகையில், அஜித் பவாரின் கருத்து - சரத்பவார்
கடந்த சனிக்கிழமை அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றது முதல் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் டெல்லியில் இருந்து மீண்டும் மும்பை திரும்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து, 54 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 53 பேர் கட்சியுடன் தொடர்பில் உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு சில அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜக அழைப்பின் பேரில் டெல்லி சென்றிருந்தனர். இந்நிலையில், அவர்களில் 3 பேர் அக்கட்சியின் இளைஞர் அணியினரால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் டெல்லியில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மும்பை திரும்பியுள்ளனர்.
தொடர்ந்து, மற்றொரு எம்எல்ஏவும் டெல்லியில் இருந்து மும்பை திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தேசியவாத காங்கிரஸின் 52 எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.