170 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Maharashtra Government 2019: மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்த பாஜகவின் தேவேந்திர ஃபட்நாவிஸூக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.



 





170 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!



Maharashtra Government 2019: மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்த பாஜகவின் தேவேந்திர ஃபட்நாவிஸூக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.



இந்தியா | Edited by Esakki | Updated: November 25, 2019 11:37 IST




 







 


EMAIL

PRINT

COMMENTS





 

170 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மகாராஷ்டிரா ஆளுநர் தலைமையில் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் சரத்பவார் பதவியேற்றனர்.




NEW DELHI: 

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 எம்எல்ஏக்கள் உட்பட 170 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக அளித்த கடிதத்தின் அடிப்படையிலே ஆளுநர் தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததாக மத்திய அரசு தரப்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிராவில் எதிர்பாராத விதமாக ஆட்சியமைத்த பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸூக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 


மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5.47 மணி அளவில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பபெறப்பட்டு, காலை 7.50 மணி அளவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.